‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கலைப்புலி தாணு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருந்த போது பண்டிகை காலங்களில் மட்டுமே முன்னணி நடிகர்களின் படங்களை வெளியிடுவது, மற்ற நாட்களை சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஒதுக்குவது என்று ஒரு விதியை கொண்டு வந்தனர். ஆனால் பெரும்பாலும் இது நடைமுறைக்கு வந்தது கிடையாது.
தற்போது தணிக்கைச்சான்று பெற்ற தேதியின் அடிப்படையில் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற விதியை தயாரிப்பாளர்கள் சங்கம் கொண்டு வந்துள்ளது. இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், சில தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
“பல படங்கள் வாங்க ஆளில்லாமல் பெட்டிக்குள் முடங்கியுள்ளன. அப்படி மாதக்கணக்கில், வருடக்கணக்கில் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கும் படத்தை ஒருவர் திடீரென வாங்கினால், முன்னுரிமைப்படி அப்படத்துக்கு தான் முதலில் வெளியிட அனுமதி வழங்க வேண்டும். அப்படி வெளியிடும் போது, ஏற்கனவே ரிலீஸ் செய்யும் படங்களின் பட்டியலில் இருக்கும் படங்கள் பாதிக்கப்படாதா? அதன் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்வார்களா?” என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
அதுமட்டுமல்ல, முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் பண்டிகை காலங்களை குறிவைத்தே வெளியிடப்படும். இந்த வருட தீபாவளிக்கு சூர்யாவின் என்ஜிகே, அஜித்தின் விசுவாசம், விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம் ஆகியவை வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்தப் படங்களுக்கு முன்னால் தணிக்கைச்சான்று பெற்ற படங்கள் முன்னுரிமை அடிப்படையில் தீபாவளிக்கு வெளியாக வேண்டும். இவற்றை பின்னுக்குத்தள்ளிவிட்டு அஜித், விஜய், சூர்யா படங்கள் வெளியானால் பட்டியலில் உள்ள படங்களின் தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்வார்களா?
எனவே, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதியமுறைப்படி, முன்னணி நடிகர்களின் படங்கள் தீபாவளி பண்டிகையை தவறவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சொல்கின்றனர் திரையுலகினர்.