600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு சினிமாவை ஆட்டம் காண வைத்து வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி. சினிமா வாய்ப்பு தருவதாக சொல்லி தன்னை ஏமாற்றியவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறார்.
அவரது பட்டியலில் ராணாவின் தம்பி அபிராம், கதாசிரியர் கோனா வெங்கட், டைரக்டர் கொரட்டலா சிவா என சிலரது பெயர்கள் வெளியாகின. அவர்களைத் தொடர்ந்து தெலுங்குப்பட தயாரிப்பாளர் வெங்கட அப்பாராவ் என்பவர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்ததாக குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் நடந்த ஒரு விவாத நிகழ்ச்சியில், தெலுங்கு நடிகரான டாக்டர் ராஜசேகருக்கு அவரது மனைவியும், நடிகையுமான ஜீவிதாவே பெண்களை செட் பண்ணி அனுப்பியதாக ஒரு குற்றச்சாட்டை வைத்தார் சமூக ஆர்வலர் சந்தியா. இது தெலுங்கு படஉலகை மேலும் அதிர வைத்தது.
அதையடுத்து, மீடியாக்களை சந்தித்தார் நடிகை ஜீவிதா. தன்னைப்பற்றி உண்மைக்கு புறம்பான செய்தியை சந்தியா வெளியிட்டிருப்பதாக சொன்னவர், அவர் மீதும், அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சேனல் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறினார்.
மேலும், என் மீது தவறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள சந்தியா அதை நிரூபிக்க வேண்டும் என்றும் கூறிய ஜீவிதா, நடிகை ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக்கில், நான் 24 மணி நேரமும் செக்ஸ் மூடிலேயே இருக்கிறேன் என்று பேசி வெளியிட்டிருந்த ஒரு வீடியோவையும் மீடியாக்கள் முன் வைத்தார்.
அதோடு, இப்படி விவகாரமானவர்களாக இருக்கும் இவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. இவர்கள் ஒன்றும் சிறிய பாப்பாக்கள் இல்லை என்றும் கூறியிருந்தார் ஜீவிதா.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று டாக்டர் ராஜசேகர் விவகாரத்தில் என்னிடம் ஆதாரம் உள்ளது என்று இன்னொரு அதிரடி செய்தியை வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. இது தெலுங்கு சினிமா உலகில் மேலும் பதட்டமான சூழலை உருவாக்கியிருக்கிறது.
அதோடு, திரையுலகில் நடக்கும் இந்த பாலியல் கலாச்சாரத்தை இத்தோடு நான் விடப்போவதில்லை. திரைமறைவில் இருக்கும் இன்னும் பல பிரபலங்களின் முகத்திரைகளை கிழிக்கப்போகிறேன். அதுவரை எனது இந்த போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி.