டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆரம்பகாலத்தில் கதை, திரைக்கதை, வசனம் என அனைத்து பொறுப்புகளையும் ஏற்று படங்களை இயக்கும் இயக்குநர்கள், பின்னாளில் அதை விட்டு விடுகிறார்கள். இதற்கும் பாலாவும் விதிவிலக்கில்லை.
பாலா இயக்கத்தில் கடைசியாக ரிலீஸான படம் 'நாச்சியார்'. ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா, ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் நடித்த அந்தப் படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் உடைய மகன் துருவ் விக்ரமை வைத்து 'வர்மா' என்ற படத்தை இயக்குகிறார் பாலா.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்கான இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜு முருகன், வசனம் எழுதியுள்ளார். 'குக்கூ', 'ஜோக்கர்' படங்களின் இயக்குநர் இவர்.
இந்தப் படத்துக்குப் பிறகு, ஒரு படத்தைத் தயாரித்து, இயக்கப் போகிறார் பாலா. அதன் திரைக்கதையை இயக்குநர்கள் நலன் குமாரசாமி, தியாகராஜன் குமாரராஜா, 'சூது கவ்வும்' படத்தின் வசனகர்த்தாவான சீனிவாசன் ஆகிய மூவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
ஆக, பாலாவுக்கு வேலை மிச்சம்.