தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவரின் அடுத்த அதிரடி குற்றச்சாட்டு பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் வெங்கட அப்பாராவ் மீது பாய்ந்துள்ளது.
தயாரிப்பாளர் அப்பாராவ் 100 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதில் நானும் உண்டு. 16 வயது சிறுமியை கூட அவர் விட்டுவைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அவரது இந்த குற்றச்சாட்டு வெளிவந்ததும் பல பெண்கள் தொலைக்காட்சிகளுக்கு போன் செய்து தங்களுக்கு அப்பாராவால் நேர்ந்த கொடுமைகள் குறித்து கூறியிருக்கிறார்கள். அதனை தெலுங்கு சேனல்கள் நேற்று ஒளிபரப்பியது. அடுத்த குற்றச்சாட்டு யார் மீதோ என்று அல்லு சில்லாகி கிடக்கிறது தெலுங்கு சினிமா.
குற்றம்சாட்டப்பட்டுள்ள அப்பாராவ் சிரஞ்சீவி நடித்த பல மெகா பட்ஜெட் படங்களை தயாரித்தவர், அவரது குடும்ப நண்பர். காங்கிரஸ் கட்சி பிரமுகர். சட்டசபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அவர் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.