அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழில் புதிதாக தொடங்கப்பட்ட சேனல் கலர்ஸ் தமிழ். இந்த சேனலின் விளம்பர தூதராக இருக்கிறார் ஆர்யா. இந்த சேனலின் ஓப்பனிங் அட்ராக்ஷ்னுக்காக ஆர்யாவை வைத்து எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஆர்யா, தான் மணந்து கொள்ளப்போகும் பெண்ணின் சுயவம்வர நிகழ்ச்சி இது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 7 ஆயிரம் இளம் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் இருந்து 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கியதுமே பல பெண்கள் அமைப்பு இந்த நிகழ்ச்சி பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என எதிர்த்தனர். அதனையும் மீறி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு கஷானா, அகார்தா, சீதாலட்சுமி ஆகியோர் தேர்வானார்கள். இதில், ஆர்யா, சீதாலட்சுமியை மணமகளாக தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆர்யா யாரையுமே தேர்வு செய்யவில்லை.
யாராவது ஒருவரை தேர்வு செய்தால் மற்றவர்கள் மனம் புண்படும், அவர்கள் குடும்பத்தினர் வருத்தப்படுவார்கள் என்று காரணம் கூறி யாரையும் தேர்வு செய்யாமல் நிகழ்ச்சியை முடித்தார் ஆர்யா.
இந்த முடிவும், நிகழ்ச்சியும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.