டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காஷ்மீர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். திரைத்துறையினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டன்ட் யூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, சிறுமி மரணம் குறித்து கேட்கும்போதே மனம் கலங்குகிறது. சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை பார்த்தால் ஆத்திரம் வருகிறது. பெண் குழந்தைகளை வளர்க்க பாடம் எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது என்றார்.