ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான 'மெர்க்குரி' படம், உலகம் முழுவதும் ரிலீஸாகிவிட்டது. சைலண்ட் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், தயாரிப்பாளர் சங்கத்தின் போராட்டம் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் ரிலீஸாகவில்லை.
இந்நிலையில், மெர்குரி படம் இணையதளத்தில் வெளியானதோடு, திருட்டு டிவிடியாகவும் புழங்க ஆரம்பித்தது. இதனால் தமிழில் படத்தை வெளியிடும்போது வசூல் பாதிக்கப்படும் என்பதால் 'தயவுசெய்து திருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள்' என வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரபுதேவா.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டிருகிறார்.
“எல்லாருக்கும் வணக்கம். ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் 'மெர்க்குரி' ரிலீஸாகியுள்ளது. எல்லாருக்கும் பிடித்திருக்கிறது; நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. வேலை நிறுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் ரிலீஸாகவில்லை. ஆனால், சீக்கிரம் ரிலீஸாகிவிடும். அதுவரைக்கும் நீங்கள் பைரசி, திருட்டு விசிடி இந்த மாதிரியெல்லாம் படம் பார்க்காமல், தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் உங்களுக்காகப் புதிதாக யோசித்து, புதுவிதமான படத்தை கொடுத்திருக்கிறார். அதேமாதிரி தயாரிப்பாளரும் அவ்வளவு பணம் போட்டு, டீம் ஒர்க்கா இரண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணியிருக்காங்க. திருட்டு விசிடியில் படம் பார்க்காமல், தியேட்டருக்கு வந்து பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார் பிரபுதேவா.