'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'விரைவில் சகோதரர் சமுத்திரக்கனி நடிக்க, நான் இயக்க இணைவதென முடிவானது' ட்விட்டரில் பதிவிட்டார் சீனு ராமசாமி. அதுவே அவருக்கு நெகட்டிவ்வாக மாறியது. அப்படியானால், விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட 'மாமனிதன்' படம் என்னவானது? அந்தப்படம் ட்ராப்பாகிவிட்டதா என்ற கேள்வி எழுந்ததும் பதறிவிட்டார் சீனுராமசாமி.
இது குறித்து சீனு ராமசாமியிடம் கேட்டபோது விளக்கம் அளித்தார்.. “விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' படத்தை இயக்கி பிறகே, சமுத்திரக்கனி படத்தை இயக்க உள்ளேன். சமுத்திரக்கனி நடிக்கும் படங்களில் சமுதாயக் கருத்துகள் நிறைந்து இருக்கும். நாங்கள் இணையும் படமும் பரபரப்பான படமாக இருக்கும். 'கண்ணே கலைமானே' ரிலீஸுக்குப் பிறகு விஜய் சேதிபதி நடிக்கும் 'மாமனிதன்' ஷூட்டிங் தொடங்கும்” என்றார்.
விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி ஏற்கனவே மூன்று படங்களில் இணைந்துள்ளனர். இந்தக் கூட்டணி நான்காவது முறையாக இணையும் படம் 'மாமனிதன்'. 'தர்மதுரை' சூப்பர் ஹிட் வெற்றியால், இந்தப் படத்துக்கு நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
சமுத்திரக்கனி தற்போது 'நாடோடிகள் 2' படத்தை இயக்கி வருகிறார். சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
இந்தப்படத்தை முடித்த பிறகே சீனுராமசாமியின் படத்தில் இணைகிறார் சமுத்திரக்கனி.