தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்படன அல்லவா..? அதில் சிறந்த ஆடியோகிராபிக்கான விருது 'வில்லேஜ் ராக்ஸ்டார்' படத்தில் பணியாற்றிய மல்லிகா தாஸ் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது அதிர்ச்சியை வெளிபடுத்தியுள்ளார் சவுன்ட் டிசைனரான, ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி.
“தேர்வு கமிட்டியில் இருக்கும் பலருக்கும் ஒலிப்பதிவாளருக்கும் ஒலி வடிவமைப்பாளருக்குமான வித்தியாசம் என்பது தெரியவில்லை. இந்த குழப்பம் சிறந்த ஆடியோகிராபி விருதுக்கான நபரை தேர்வு செய்வதிலும் பிரதிபலித்திருக்கிறது. ஆடியோகிராபி தொடர்பான எந்த கருவியையுமே தொட்டிராத நபருக்குத் தான் இந்தமுறை விருது வழங்கப்பட்டுள்ளது என்பது வெட்ககேடானது. விருது தேர்வுக்கான குழுவில் தகுதி வாய்ந்த தொழிநுட்ப வல்லுனர்களையும் இடம்பெற செய்ய வேண்டும்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரசூல் பூக்குட்டி