இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்படன அல்லவா..? அதில் சிறந்த ஆடியோகிராபிக்கான விருது 'வில்லேஜ் ராக்ஸ்டார்' படத்தில் பணியாற்றிய மல்லிகா தாஸ் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது அதிர்ச்சியை வெளிபடுத்தியுள்ளார் சவுன்ட் டிசைனரான, ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி.
“தேர்வு கமிட்டியில் இருக்கும் பலருக்கும் ஒலிப்பதிவாளருக்கும் ஒலி வடிவமைப்பாளருக்குமான வித்தியாசம் என்பது தெரியவில்லை. இந்த குழப்பம் சிறந்த ஆடியோகிராபி விருதுக்கான நபரை தேர்வு செய்வதிலும் பிரதிபலித்திருக்கிறது. ஆடியோகிராபி தொடர்பான எந்த கருவியையுமே தொட்டிராத நபருக்குத் தான் இந்தமுறை விருது வழங்கப்பட்டுள்ளது என்பது வெட்ககேடானது. விருது தேர்வுக்கான குழுவில் தகுதி வாய்ந்த தொழிநுட்ப வல்லுனர்களையும் இடம்பெற செய்ய வேண்டும்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரசூல் பூக்குட்டி