இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக சரிகமப என்ற இசை நிகழ்ச்சி நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சியில் பாடகர், பாடகிகளுக்கு பல சுற்று போட்டிகள் நடந்தது. இளைஞர்களுடன் ரமணியம்மாள் என்ற 63 வயது பாட்டியும் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.
இறுதி சுற்றுக்கு ஸ்ரீநிதி, சஞ்சய், ரமணியம்மாள், வர்ஷா, ஜாஸ்கரன் சிங் ஆகியோர் தேர்வானார்கள். 5 பேருமே போட்டி போட்டு பாடல்களை பாடினார்கள். இறுதியில் வர்ஷா டைட்டில் வென்றார்.
கேராளவைச் சேர்ந்த வர்ஷா, சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் படித்தவர், சில படங்களில் பாடவும் செய்திருக்கிறார். டைட்டில் வென்றது குறித்து வர்ஷா கூறும்போது "ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். இந்த டைட்டில் என் பாட்டு பயணத்தின் அடுத்த கட்டத்தை துவக்கி இருக்கிறது. தொடர்ந்து பாடுவேன். சின்னத்திரையிலும் பாடுவேன். சினிமாவிலும் பாடுவேன். என்னை தேர்வு செய்த நடுவர்கள், வாக்களித்த இசை ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி" என்றார்.