ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் பார்த்திபனுக்கு சொந்தமான வீடு ஒன்று திருவான்மியூரில் உள்ளது. இந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ள பார்த்திபன், வீட்டின் முன்பகுதியில் தனது அலுவலகத்தை நடத்தி வந்தார். கதை விவாதம், நடிக்கும் படத்தின் கதை கேட்பது, திரைக்கதை எழுதுவது உள்ளிட்ட பணிகளை தனது உதவியாளர்களுடன் சேர்ந்து இந்த அலுவலகத்தில் செய்து வந்தார்.
தனக்கு வழங்கப்பட்ட பரிசுகள், தங்க பதக்கங்கள், மற்றும் சேமிப்புக்காக சில தங்க பிஸ்கட்டுகளையும் அலுவலத்தில் வைத்திருந்திருக்கிறார். நேற்று முன்தினம் இரவில் இந்த அலுவலகத்திற்குள் புகுந்த திருடர்கள், பதங்கங்கள், பரிசுபொருட்கள், தங்க பிஸ்கட்டுகளை திருடிச் சென்று விட்டார்கள். இதுகுறித்து பார்த்திபன் திருவான்மியூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரத்து வருகிறார்கள். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு அறிவிக்கப்படவில்லை.