ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி |
நடிகர் பார்த்திபனுக்கு சொந்தமான வீடு ஒன்று திருவான்மியூரில் உள்ளது. இந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ள பார்த்திபன், வீட்டின் முன்பகுதியில் தனது அலுவலகத்தை நடத்தி வந்தார். கதை விவாதம், நடிக்கும் படத்தின் கதை கேட்பது, திரைக்கதை எழுதுவது உள்ளிட்ட பணிகளை தனது உதவியாளர்களுடன் சேர்ந்து இந்த அலுவலகத்தில் செய்து வந்தார்.
தனக்கு வழங்கப்பட்ட பரிசுகள், தங்க பதக்கங்கள், மற்றும் சேமிப்புக்காக சில தங்க பிஸ்கட்டுகளையும் அலுவலத்தில் வைத்திருந்திருக்கிறார். நேற்று முன்தினம் இரவில் இந்த அலுவலகத்திற்குள் புகுந்த திருடர்கள், பதங்கங்கள், பரிசுபொருட்கள், தங்க பிஸ்கட்டுகளை திருடிச் சென்று விட்டார்கள். இதுகுறித்து பார்த்திபன் திருவான்மியூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரத்து வருகிறார்கள். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு அறிவிக்கப்படவில்லை.