ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, அடுத்தடுத்து வெளியிட்டு வரும் தகவல்களால் அதிர்ந்து போய் கிடக்கிறது தெலுங்கு திரையுலகம். மிகவும் கண்ணியமானவர்களாக பார்க்கப்பட்ட முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை போட்டோ ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார்.
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பல முன்னணி நடிகைகள் முன்வந்துள்ளனர். நடிகைகள் அபூர்வா, சுனிதா ரெட்டி, ஸ்ருதி, சந்தியா நாயுடு, ஹேமா, நாகலட்சுமி உள்ளிட்டோர் ஸ்ரீரெட்டிக்கு ஆதராவக களத்தில் இறங்கி உள்ளனர்.
இவர்கள் நேற்று ஐதராபாத்தில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பல நடிகைகள், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் பற்றி விவரித்தபோது கதறி அழுதனர். அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
தெலுங்கு பட உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சினிமா வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள். அதற்கு உடன்படும் பெண்களை ஆசைக்கு பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விடுகிறார்கள். பகலில் பெண்களை அம்மா என்று அழைக்கிறார்கள். இரவில் படுக்கை அறை பொம்மையாக்கி விடுகிறார்கள்.
80 வயது முதியவருக்கும் பெண் தேவைப்படுகிறது. வயதான பெண்களையும் விடுவது இல்லை. செக்ஸ் தொல்லை கொடுக்கும் இன்னும் பலரது பெயர்களை வெளியிடுவோம். ஆந்திர, தெலுங்கானா முதல்வர்கள் இந்த பிரச்னையில் தலையிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.