டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ராம் சரண் ஹீரோவாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடிக்க, சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தெலுங்குப் படம் 'ரங்கஸ்தலம்'. இந்தப் படத்தில், காதல் காட்சிகளில் ராம் சரணுடன் படு நெருக்கமாக நடித்ததோடு, முத்தக் காட்சியிலும் நடித்திருக்கிறார் சமந்தா.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரங்கஸ்தலம் படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ரங்கஸ்தலம் படத்தில் முத்தக்காட்சியில் நடித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
'திருமணமான பிறகு முத்தக் காட்சியில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டீர்கள்?' என்ற கேள்விக்கு சாமர்த்தியமாக பதில் அளித்துள்ளார் சமந்தா.
“திருமணமான நடிகர்கள் முத்தக் காட்சியில் நடித்தால் மட்டும் யாரும் கேள்வி கேட்பதில்லை. அதுவே நடிகைகள் என்றால் மட்டும் ஏதேதோ கேட்கிறீர்கள்” என்பதுதான் சமந்தாவின் பதில்.
அதோடு “நான் ராம் சரணின் கன்னத்தில் தான் முத்தமிட்டேன். கேமரா ட்ரிக்ஸில் அதை லிப் லாக் காட்சியாக மாற்றிவிட்டார்கள்” என்று முத்தக்காட்சி எடுக்கப்பட்ட ரகசியத்தையும் போட்டு உடைத்துவிட்டார் சமந்தா.