ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராம் சரண் ஹீரோவாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடிக்க, சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தெலுங்குப் படம் 'ரங்கஸ்தலம்'. இந்தப் படத்தில், காதல் காட்சிகளில் ராம் சரணுடன் படு நெருக்கமாக நடித்ததோடு, முத்தக் காட்சியிலும் நடித்திருக்கிறார் சமந்தா.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரங்கஸ்தலம் படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ரங்கஸ்தலம் படத்தில் முத்தக்காட்சியில் நடித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
'திருமணமான பிறகு முத்தக் காட்சியில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டீர்கள்?' என்ற கேள்விக்கு சாமர்த்தியமாக பதில் அளித்துள்ளார் சமந்தா.
“திருமணமான நடிகர்கள் முத்தக் காட்சியில் நடித்தால் மட்டும் யாரும் கேள்வி கேட்பதில்லை. அதுவே நடிகைகள் என்றால் மட்டும் ஏதேதோ கேட்கிறீர்கள்” என்பதுதான் சமந்தாவின் பதில்.
அதோடு “நான் ராம் சரணின் கன்னத்தில் தான் முத்தமிட்டேன். கேமரா ட்ரிக்ஸில் அதை லிப் லாக் காட்சியாக மாற்றிவிட்டார்கள்” என்று முத்தக்காட்சி எடுக்கப்பட்ட ரகசியத்தையும் போட்டு உடைத்துவிட்டார் சமந்தா.