விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
நகர்ப்புற பின்னணியில் கதையம்சம் கொண்ட தமிழ் திரைப்படங்களே, அதிகமாக எடுக்கப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக கிராமப் புற கதைகளை நோக்கி, இயக்குநர்கள் கவனம் திரும்பி இருக்கிறது.
ஒரு கிடாபியின் கருணை மனு, கொடி வீரன், மன்னர் வகையறா, மதுரை வீரன் உள்ளிட்டப் படங்களை அடுத்து, கிராமப்புற பின்னணியில் நிறைய படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும், விவசாயத்தை முன்னிறுத்தி கதைகள் பின்னப்பட்டிருக்கிறது.
விவசாயத்தை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்கள் நடிக்க விரும்புவதை அடுத்தே, இப்படிப்பட்ட கதைகள் பின்னப்படுவதாக, சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.
நடிகர் விஜய் நடிக்க, இயக்குநர் முருகதாஸ் இயக்க தயாராகும் படத்தில் முழுக்க முழுக்க கிராமங்களையே மையப்படுத்தி கதை பின்னப்பட்டிருப்பதோடு, விவசாயமும், அரசியலும் கலந்து படமாக்கப்படுகிறது.
அஜித்தின் புதிய படம், சிவகார்த்திகேயனின் சீமராசா, உதயநிதியின் கண்ணே கலைமானே, விஷாலின் சண்டைக் கோழி -2 படம் உள்ளிட்ட பல புதிய படங்கள், கிராமங்களை மையமாகக் கொண்ட கதையம்சம் உள்ளவை.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படமும் விவசாயத்தை முக்கியமாகக் கொண்டவை. இவை தவிர, சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் சமுத்திரக் கனி நடிக்கும் வெள்ளை யானை, அமீர் நடிக்கும் அச்சமில்லை அச்சமில்லை, காக்காமுட்டை படமெடுத்த மணிகண்டன் இயக்கும் கடைசி விவசாயி, கத்திரிக்கா வெண்டக்கா உள்ளிட்ட பல படங்கள் விவசாயத்தையும், விவசாயியையும் பிரதானப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படங்கள்.
காவிரி பிரச்னை பிரதான பிரச்னையாக இருப்பதை அடுத்து, இயக்குநர்களும், நடிகர்களும் விவசாயத்தை மையமாக வைத்து படம் எடுக்க விரும்புவதாலேயே, விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கூறினார்.