இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள 'காலா' படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 46 நாட்களாக எந்தப் புதுப் படமும் வெளியாகவில்லை. திரையுலக் பிரச்சினைகளுக்காக நாளை அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதன்பிறகுதான் இந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வருமா என்பது தெரிய வரும்.
இதனிடையே, 'காலா' படத்தைத் தடையை மீறி வெளியிட படத் தயாரிப்பு முடிவு செய்ததாக முன்னர் செய்திகள் வெளியாகின. அதன்பின் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ரஜினிகாந்திடம் சென்று நிலைமையை விளக்கினார்கள். அதன் பின் படத்தையும் தள்ளி வைக்க அவர்கள் சம்மதித்ததாகத் தெரிகிறது.
'காலா' படத்தை ஜுன் மாதம் வெளியிட அப்படத்தை வாங்கியுள்ள லைகா நிறுவனம் முடிவு செய்ததாக கடந்த வாரம் தகவல் வெளியானது. தற்போது ரம்ஜானை முன்னிட்டு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள் என்கிறார்கள். ஜுன் 16 ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்தினம் ஜுன் 15ம் தேதி வெள்ளிக்கிழமை படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாகத் தெரிகிறது.