'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் இன்றைய வசூல் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மகனான விஜய், 1992ம் ஆண்டு வெளிவந்த நாளைய தீர்ப்பு படத்தில் நாயகனாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் ஓடவில்லை.
அதன்பின் எஸ்.ஏ.சந்திரசேகர், அவருடைய ஆஸ்தான ஹீரோவான விஜயகாந்திடம் சென்று தன் மகன் விஜய்யுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என கேட்டார். அதற்கு உடனே விஜயகாந்தும் சம்மதித்தார். அப்படி உருவான படம்தான் செந்தூரபாண்டி. அந்தப் படம்தான் விஜய்யை தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் கொண்டு போய் சேர்த்தது.
தொடர்ந்து தனி நாயகனாக “ரசிகன், தேவா, விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ளே படங்களில் நடித்தார் விஜய். பூவே உனக்காக படம் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்து பின்னர் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார்.
விஜய்யின் வெற்றியில் விஜயகாந்திற்கு முக்கியப் பங்குண்டு என மீண்டும் மனம் திறந்திருக்கிறார் அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயகாந்த் திரையுலகத்திற்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதற்கு அவருக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவில் பேசிய சந்திரசேகர் பழைய நினைவுகளைப் பற்றி மீண்டும் பேசினார்.
“என் மகன் விஜய் நடிகனாக ஆசைப்பட்டதும், நாளைய தீர்ப்பு படம் எடுத்தேன். ஆனால், அந்தப் படம் ஓடவில்லை. விஜயகாந்துடன் இணைந்து நடித்தால் அவரால் நல்ல நடிகராக முடியும் என்று நினைத்தேன். விஜயகாந்துக்கு போன் செய்து அவரைச் சந்திக்க வேண்டும் என்றேன். ஆனால், அடுத்த இரண்டு நிமிடங்களில் அவர் என் வீட்டிற்கு வந்துவிட்டார். விஜய்யைப் பற்றி சொன்னதும், எப்போது ஆரம்பிக்கிறோம் என்று உடனே சம்மதம் சொன்னார். அவருடைய சம்பளம் பற்றி கேட்டதும், முதலில் ஷுட்டிங்கை ஆரம்பியுங்கள், விஜய் நல்ல நடிகராக வரட்டும் பின்னர் பேசுவோம் என்றார்.
செந்தூரபாண்டி படம் எடுத்து முடித்தோம், பெரிய வெற்றியைப் பெற்றது. விஜய்யின் வெற்றிக்கு விஜயகாந்த் அமைத்துக் கொடுத்த படிக்கட்டுகள் மிகப் பெரிய இடத்தில் உள்ளன,” என்றார்.
எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்து 1981ம் ஆண்டு வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படம்தான் விஜயகாந்தை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.