'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜயகாந்த் சினிமாவில் நடிக்க தொடங்கி 40 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகில் உள்ள சுரசங்காவில் நேற்று நடந்த இந்த விழாவில் வேல்ஸ் பல்கலைகழக இணை வேந்தர் ஐசரி கணேசன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, மனோபாலா, விக்ரமன், நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், நாசர், மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விஜயகாந்தின் செல்வாக்கிற்கு காரணம் கலைப்பணியா, அரசியல் பணியா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. விஜயகாந்த் பற்றிய சிறப்பு குறும்படம் திரையிடப்பட்டது. இறுதியில் விஜயகாந்த்தும், அவரது மனைவி பிரேமலதாவும் நன்றி தெரிவித்து பேசினார்கள்.
இந்த விழாவில் விஜயகாந்துடன் நடித்த நடிகர், நடிகைகள், அவருடன் பிரபலமாக இருந்தவர்கள், குறிப்பாக ரஜினி, கமல் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.