சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
டிஜிட்டல் கட்டண குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திரைத்துறையினர் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். சினிமா தொடர்பான எந்த பணிகளும் நடக்கவில்லை. புதிய படங்களும் வெளிவரவில்லை. தியேட்டர் அதிபர்கள், கியூப் நிறுவன நிர்வாகிகளுடன் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்திருக்கிறது.
இந்த நிலையில் தற்போது மாநில அரசு இந்த பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறது. செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நாளை(ஏப்., 17) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர்கள் ரோகினி பன்னீர் செல்வம், அபிராமி ராமநாதன், மற்றும் கியூப் நிறுவன அதிகாரிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பேச வேண்டிய விஷயங்கள் பற்றி தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேற்று கூடி விவாதித்தனர். கியூப் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் கட்டுவதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருப்பது. வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தால் தணிக்கை சான்றிதழ் பெற்ற தேதியின் அடிப்படையில் படங்களை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.