ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டிஜிட்டல் கட்டண குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திரைத்துறையினர் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். சினிமா தொடர்பான எந்த பணிகளும் நடக்கவில்லை. புதிய படங்களும் வெளிவரவில்லை. தியேட்டர் அதிபர்கள், கியூப் நிறுவன நிர்வாகிகளுடன் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்திருக்கிறது.
இந்த நிலையில் தற்போது மாநில அரசு இந்த பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறது. செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் நாளை(ஏப்., 17) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர்கள் ரோகினி பன்னீர் செல்வம், அபிராமி ராமநாதன், மற்றும் கியூப் நிறுவன அதிகாரிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பேச வேண்டிய விஷயங்கள் பற்றி தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேற்று கூடி விவாதித்தனர். கியூப் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் கட்டுவதில்லை என்கிற முடிவில் உறுதியாக இருப்பது. வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தால் தணிக்கை சான்றிதழ் பெற்ற தேதியின் அடிப்படையில் படங்களை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.