ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்துள்ள பேட்டியில், காவிரி நீரில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகி விடும்.
காவிரி நீரை வைத்து விவசாயிகள் வாழ்ந்து வந்தார்கள்; இப்போது அரசியல்வாதிகள் அதில் தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. ஒரு நதி நீரை குடித்து வாழ்ந்து, விவசாயம் செய்த மக்கள் சண்டையிட்டு கொள்வது சரியல்ல.
காவிரியை மீட்போம் என தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றும் நிலை தொடரக்கூடாது. காவிரி ஆற்றில் மணல் அள்ளுபவர்களுக்கு எதிராக அரசியல்வாதிகள் துரும்பைக் கூட கிள்ளிப் போடுவதில்லை. அரசியல்வாதிகளின் சுயநலமே இத்தனை ஆண்டுகளாக காவிரி பிரச்சினை தீராததற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.