இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்துள்ள பேட்டியில், காவிரி நீரில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகி விடும்.
காவிரி நீரை வைத்து விவசாயிகள் வாழ்ந்து வந்தார்கள்; இப்போது அரசியல்வாதிகள் அதில் தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. ஒரு நதி நீரை குடித்து வாழ்ந்து, விவசாயம் செய்த மக்கள் சண்டையிட்டு கொள்வது சரியல்ல.
காவிரியை மீட்போம் என தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றும் நிலை தொடரக்கூடாது. காவிரி ஆற்றில் மணல் அள்ளுபவர்களுக்கு எதிராக அரசியல்வாதிகள் துரும்பைக் கூட கிள்ளிப் போடுவதில்லை. அரசியல்வாதிகளின் சுயநலமே இத்தனை ஆண்டுகளாக காவிரி பிரச்சினை தீராததற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.