‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஒளி ஓவியர் பாலுமகேந்திரரா மிகப்பெரிய வாசிப்பாளர். எப்போதும் புத்தகங்களுடன்தான் இருப்பார். தனது வாழ்வின் கடைசி காலம் வரை படித்துக்கொண்டே இருந்தார். ஒரு நல்ல வாசிப்பாளன்தான் நல்ல இயக்குனராக இருக்க முடியும் என்பார்.
தற்போது அவரது பெயரில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. மதராச பட்டினம், வனமகன் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவரும் 6 அத்தியாயம் படத்தின் இயக்குனர்களில் ஒருவருமான அஜயன்பாலா இந்த நூலகத்தை உருவாக்கி உள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் பாலுமகேந்திரா நூலகம், நடிகர் சத்யராஜ், இயக்குனர்கள் வெற்றிமாறன், ராம் , சுப்ரமணிய சிவா, மீரா கதிரவன், நடிகை ரோகிணி, எழுத்தாளர் பாமரன் ஆகியோரால் துவக்கப்படது .