டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
முன்னாள் உலக அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் வெளிநாட்டு கார் ஒன்றை 55 லட்சத்துக்கு வாங்கினார். இந்த காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த வகையில் வரிஏய்ப்பு செய்ததாக அவர் மீது சுங்க இலாகா துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் சுஷ்மிதா தான் பழைய கார் என்று நினைத்தே அதை வாங்கியதாகவும் அதில் வரி ஏய்ப்பு நடந்தது தனக்கு தெரியாது என்றும் கூறினார். காருக்கு வரியாக 20 லட்சம் ரூபாயும் கட்டினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமும் அளித்தார். தான் வரி கட்டிவிட்டதால் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறும் தனக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து செய்யுமாறும் சுஷ்மிதா சென் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதனை ஏற்று நீதிமன்றம் பிடிவாரண்ட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து மத்திய புலனாய்வுத்துறை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம். எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவு சரியே என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.