'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த்திரையுலகில் மார்ச் 1-ந்தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருவதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள் ளது. தமிழ்ப்புத்தாண்டு தினத்திற்குள் ஒரு நல்ல முடிவு தெரியும் என்று எதிர்பார்த்தவர்கள் இதுவரை தயாரிப்பாளர் சங்கத்திடமிருந்து வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் தேதி குறித்து அறிவிக்கப்படாததால் நடிகர், நடிகைகள், டெக்னீசியன்கள் என அனைவருமே பீல் பண்ணத் தொடங்கிவிட்டார்கள்.
இதுகுறித்து நடிகர் அரவிந்த்சாமி விடுத்துள்ள ஒரு செய்தியில், சினிமாத்துறையை சீரமைக்க வேண்டும் என்பதற்காக இந்த வேலை நிறுத்தத்தை கடைபிடிக் கிறார்கள். என்றாலும் நீண்டகால காத்திருப்பு என்பது சோர்வடைய செய்கிறது. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் தீர்மானங்களை விரைவாக எடுக்க வேண்டும்.
தயாரிப்பாளர் சங்கத்தில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால், சீக்கிரம் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.