ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிபா, பாலியல் கொடுமைக்கு உள்ளாகி, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை பாலியல் கொடுமை செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும், அதற்கு மரண தண்டனையே ஒரே வழி, இதற்காக அனைவரும் போராட வேண்டும் என நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது...
காமுறும் பேய்கள்
நம் நாடும், மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் புத்தாண்டை கொண்டாட மனம் ஏற்கவில்லை. அரசியல்வாதிகள், பாலியல் குற்றவாளிகள், குழந்தைகள் மேல் காமுறும் பேய்களின் கைகளில் சிக்கி நாம் சின்னாபின்னாவானது போதாதா? உங்களை கெஞ்சி கேட்கிறேன், எதிர்த்து நில்லுங்கள், கேள்வி கேளுங்கள், உங்களால் முடிந்த எதையாவது செய்யுங்கள்.
மரண தண்டனை
ஒரு குழந்தை உயிரின் மதிப்பு என்பது ஒரே ஒரு நாள் கோபத்திற்கும், இரங்கலுக்கும் மட்டுமே உரியதா?, நாம் அனைவரும் இணைவோம், நியாயம் கேட்போம். பாலியல் பலாத்காரத்திற்கு ஒரே தீர்வு, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மட்டுமே. இதை சட்டம் இயற்ற போராடுவோம். இங்கு கேட்டால் மட்டுமே கிடைக்கும். சக இந்தியர்களை நான் இருகரம் கூப்பி கெஞ்சி அழைக்கிறேன். பாலியல் பலாத்காரம் என்பது சகித்து கொண்டு செல்லும் விஷயமில்லை.
காலம் தாழ்த்தி விட்டோம்
இது நம் பிரச்னை இல்லை என்று நாம் ஒதுங்க கூடாது. இந்த ஆத்திரத்தையும், வலியையும் புரிந்து கொள்ள நான் ஒரு தாயாக வேண்டிய அவசியமில்லை. மனிதத்தன்மை உடையவர்களாக இருந்தாலே போதும். ஏற்கனவே நாம் காலம் தாழ்த்தி விட்டோம்.
கோழையாக இருக்காதீர்கள்
இன்னும் எத்தனை அப்பாவி உயிர்களை இழக்க வேண்டும். நான் உங்களை வீட்டை விட்டு வெளியே வந்து போராட சொல்லவில்லை. சமூகவலைதளம் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த அழைக்கிறேன். அதையாவது செய்யுங்கள், கோழையாக இருக்காதீர்கள்.
அமைதி காக்கும் நேரமல்ல
கடுமையான தண்டனை இல்லையென்றால் இது போன்ற கொடூரங்களை ஒரு நாளும் நிறுத்த முடியாது. காலம் கடக்கும் முன் ஒரு மாற்றத்தை ஒன்றிணைந்து நாம் அனைவரும் ஏற்படுத்தலாம். என்னை டுவிட்டரில் பின்தொடரும் 8 லட்சம் பேருக்கும் இத்தகவலை பகிர்ந்துள்ளேன். நீங்களும் பகிர வேண்டுகிறேன். இது அமைதி காக்கும் நேரமல்ல, பாலியல் பலாத்காரத்திற்கு மரணதண்டனை கொடு.... எங்களுக்கு நீதி வேண்டும்.
நான் பாதுகாப்பாக உணரவில்லை
நான் வரலட்சுமி சரத்குமார். நான் ஒரு பெண். இன்று நான் எதிர்த்து நிற்கிறேன். உண்மையாகவே நான் பாதுகாப்பாக உணரவில்லை. கொடூரமானவர்கள் தங்கள் தவறுகளுக்கு தண்டனை பெரும் காலம் நெருங்கிவிட்டது. இனிமேலும் ஒரு குழந்தையோ அல்லது ஒரு பெண்ணோ உயிரிழக்க கூடாது.
ஜெய்ஹிந்த்!
இவ்வாறு வரலட்சுமி கூறியுள்ளார்.