அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழ்த் திரையுலகத்தில் தயாரிப்பாளர் சங்கம் கடந்த 45 நாட்களாக புதிய படங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது. வரும் 17ம் தேதியன்று அரசு தரப்பில் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரசிடம் தெரிவிக்க வேண்டிய கருத்துகள் என்னென்ன என்பது குறித்து நேற்று அனைத்துத் தயாரிப்பாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் அன்றைய தினம் பேச்சு வார்த்தை நடக்கும் எனத் தெரிகிறது.
இதனிடையே, கடந்த 45 நாட்களாக வெளியாகாமல் முடங்கிக் கிடக்கும் படங்களை வெளியிடுவதற்கு ஒரு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அது இனி வரும் காலங்களிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டது. அந்த முடிவுக்கு அனைத்து தயாரிப்பாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனராம்.
அதன்படி, இனி படங்களின் வெளியீடு என்பது அந்தப் படங்கள் எந்த தேதியில் சென்சார் ஆனதோ அதை வைத்தே முன்னுரிமை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய படங்களோ, சிறிய படங்களோ, எந்தப் படம் முதலில் சென்சார் செய்யப்படுகிறதோ, அந்த வரிசைப்படிதான் படங்களை வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள்.
பெரிய படங்களால் சிறிய படங்களின் வெளியீடு பாதிக்கப்படக் கூடாது என்பதற்குத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளதாம்.