'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
பாடகர் யேசுதாஸ்க்கு 8வது முறையாக தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. 8 விருதுகள் பெறும் முதல் பாடகர் அவர்தான். தேசிய விருது பற்றி யேசுதாஸ் கூறியதாவது:
இன்று (நேற்று) காலையில் நான் வழக்கம்போல எழுந்து பிராக்டீஸ் பண்ணிக்கொண்டிருந்தேன். என் மகன் வந்து என்னை கட்டித் தழுவினான். நான் வழக்கம்போல பாசத்தை பொழிகிறான் என்று தான் நினைத்தேன். அதற்பிறகு சொன்னான். உங்களுக்கு தேசிய விருது அறிவித்திருக்கிறார்கள். இது 8வது விருது என்றும் சொன்னான்.
என் குருநாதர் சொல்வார் லட்சுமி (பணம்) பின்னாடி போகாதே அவள் எப்போ வேணாலும் உன்னை கைவிட்டு விடுவாள். சரஸ்வதி (ஞானம்) பின்னால் போ எப்போதும் கூடவே இருப்பாள் என்று. அதைத்தான் நான் இப்போதும் கடைபிடிக்கிறேன். ஸ்ருதி சுத்தமாக இருந்தால் பணமும், புகழும் தானாக வரும். அதை தேடிப்போக வேண்டிய அவசியமே இல்லை.
சங்கீதம் பெரிய வரம். அது கிடைத்தால் வாழ்க்கையில் வேறு எதுவுமே தேவையில்லை. அதற்கு உண்மையாக இருக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்தவுடன் எனக்கு எதுவுமே தெரியாது இனிமேல்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கருதி தினமும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நிறைய கிடைக்கும். இன்றைய இளைஞர்களுக்கு ஒன்று மட்டும் சொல்வேன் நேரத்தை வீணாக்காதீர்கள். பயனுள்ள வழியில் அதனை செலவு செய்யுங்கள் உங்களுக்கு எல்லாம் வந்து சேரும். விருது கொடுப்பவர்களுக்கும், எனது ரசிகர்களுக்கும் நன்றிகள் கோடிகள். என்றார்.