மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப என்கிற மியூசிக் ரியாலிட்டி ஷோ மூலம் இசை உலகில் திடீர் நட்சத்திரமாக வளர்ந்திருப்பவர், 60 வயதை தாண்டிய ரமணியம்மாள். பழைய பாடல்களை அனாயசமாக பாடி கைதட்டல்களை அள்ளும் ரமணியம்மாளுக்கு ராக் ஸ்டார் பட்டம் கொடுத்து கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். திடீர் புகழால் வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சென்று வந்து விட்டார். வீட்டு வேலை செய்து வந்த ரமணியம்மாள் இப்போது கை நிறைய பணத்துடன் நடுத்தர வர்கத்துக்கு பெண்ணாகியிருக்கிறார்.
சரிகமப நிகழ்ச்சியின் இறுதி போட்டிகள் வருகிற 14ந் தேதி நடக்கிறது. இறுதி சுற்றில் போட்டியிட ரமணியம்மாள் உள்பட 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். 63 வயதாகும் ரமணியம்மாள் 20 முதல் 25 வயது வரை உள்ள ஜாஸ்கரன் சிங், சஞ்சய், ஸ்ரீநிதி, வர்ஷா ஆகிய 4 இளம் பாடகர்களுடன் மோதுகிறார்.
நடுவர்கள் தீர்ப்பு எப்படி இருந்தாலும் ரசிகர்களின் ஓட்டு ரமணியம்மாளுக்குத்தான் கிடைக்கும் அதனால் அவர் வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள். பரிசை வென்று சினிமா பாடகி ஆக வேண்டும் என்பதே ரமணியம்மாளின் லட்சியம். அதற்காக தீவிர பயிற்சியில் இருக்கிறார். அவர் வெற்றிபெற வாழ்த்துவோம்.