தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
தியேட்டர்களில் கியூப் கட்டணத்தை குறைக்க வேண்டும், பார்க்கிங், கேண்டீன், ஆன்லைன் புக்கிங் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கம் கடந்த மார்ச் 1ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. தியேட்டர் அதிபர்கள், டிஜிட்டல் சேவை நிறுவனத்தினருடன் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்திருக்கிறது.
இந்தநிலையில் தயாரிப்பாளர் சங்கம் இன்று தியேட்டர் அதிபர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்துகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு திரைஅரங்க உரிமையாளர்களையும் நேரடியாக சந்தித்து தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக நாளை (இன்று) வியாழன் மாலை 5 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. நடக்கவிருக்கும் இந்த முக்கிய கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் உள்ள திரைஅரங்க உரிமையாளர்களான சகோதர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.