தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் காளி. இதனை கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார். விஜய் ஆண்டனி பிலிம் பேக்டரி சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த வில்லியம் அலெக்சாண்டர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது
விஜய் ஆண்டனி நடித்த அண்ணாத்துரை படத்தை வாங்கி, வெளியிட்டதில், எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து, காளி படத்தை குறைந்த விலைக்கு எனக்கு தருவதாக விஜய் ஆண்டனியும், காளி படத்தை தயாரிக்கும் அவரது மனைவி பாத்திமாவும் உத்தரவாதம் அளித்தனர். நானும் ரூ.50 லட்சம் முன்தொகை கொடுத்து, அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன்.
தற்போது திரையுலக வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதனால், புதிய படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால், என்னால் பாக்கித் தொகையை கொடுக்க முடியவில்லை. இதையடுத்து காளி படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய போவதாக விஜய் ஆண்டனி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனவே, காளி படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு இடைக்கால தடை விதித்ததோடு தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி 4.7 கோடி நீதிமன்றத்தில் டெபாசிட் கட்டிவிட்டு படத்தை வெளியிடலாம் என்று நிபந்தனை விதித்தது.
இதை எதிர்த்து தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று 2 நீதிபதிகள் அடங்கிய பென்ஞ் விசாரித்தது. அதைத் தொடர்ந்து "மனுதாரார் (பாத்திமா) 2 கோடி ரூபாய் நீதிமன்றத்தின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து விட்டு படத்தை வெளியிடலாம். தனி நீதிபதி விதித்த இடைக்கால தடை நீக்கப்படுகிறது" என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.