தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 40 நாட்களாக புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருக்கிறது. டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் கட்டணங்களுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் புதிய படங்களை வெளியிடாத போராட்டத்தை அறிவித்தது. அந்த போராட்டம் வெற்றிகரமாக 40வது நாளைக் கடந்துள்ளது.
சமீபத்தில் வேறு சில டிஜிட்டல் சேவை நிறுவனங்களுடன் தயாரிப்பாளர் சங்கம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது. இதன் மூலம் ஸ்டிரைக் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியே முடிவுக்கு வந்தாலும் இந்த மாதம் வரை இந்த ஸ்டிரைக் நீடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். சில சட்டச் சிக்கல்களை முடித்துவிட்டுத்தான் ஸ்டிரைக் வாபஸ் பெறப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டு தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதியன்று புதிய படங்கள் வருவது வழக்கம். அதற்குள் பள்ளித் தேர்வுகள் முடிந்து விடும். கோடை விடுமுறையும் ஆரம்பமாகும். அதனால், படங்களுக்கு நல்ல வசூல் கிடைக்கும். ஆனால், இந்த வருடம் இந்த வேலை நிறுத்தத்தால் புதிய படங்கள் புத்தாண்டிற்கு வர வாய்ப்பில்லை. சுமார் 50 படங்கள் வெளிவர வேண்டிய சூழ்நிலையில் ஏப்ரல் மாதம் ஸ்டிரைக் முடிவடையும் நிலைமை வந்தாலும் மே மாதங்களில் அவ்வளவு படங்களையும் எப்படி வெளியிடுவார்கள் என்பதும் புரியாத புதிராகவே உள்ளது.