இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கியூப் கட்டண உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 1ந் தேதி முதல் புதிய படங்கள் எதையும் வெளியிடாமல், படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் திரையுலகினர் ஈடுபட்டு வருகிறார்கள். டிஜிட்டல் நிறுவனங்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருடன் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் திரைப்பட தொழிலாளர்களின் நிலையை உணர்ந்து தமிழக அரசு திரையுலகினருடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்திருக்கிறது. அதன்படி டிஜிட்டல் நிறுவன அதிகாரிகள், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், தியேட்டர் அதிபர் சங்க நிர்வாகிகள், பெப்சி நிர்வாகிகள் ஆகியோர் அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். முதல் கட்டடமாக அதிகாரிகள் மட்டத்திலும், பின்னர் அமைச்சர்கள் மட்டத்திலும் இந்த பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிகிறது. இன்று அல்லது நாளை இந்த பேச்சுவார்த்தை தொடங்கும். இதற்கான அதிகாரபூர்வ அழைப்பு இன்று அரசு தரப்பிடமிருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.