'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன். 60 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா தயாரிப்பு அனுபவம் பெற்ற தயாரிப்பாளர். அவர் தயாரித்த படங்கள் வெற்றி தோல்வியை சந்தித்தபோதும் ஒருவருக்கு ஒரு ரூபாய் சம்பள பாக்கியோ, பணப்பிரச்சினையோ சந்தித்திராத தயாரிப்பாளர். ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு பூஜை போட்ட ஒரே தயாரிப்பாளர். அடக்கம், அமைதிக்கு பெயரெடுத்தவர்.
ஏவிஎம்.சரவணன் தனது திரையுலக அனுபவங்களை தொகுத்து நானும் சினிமாவும் என்ற புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா நடந்தது. நடிகர் சிவகுமார் வெளியிட நல்லி குப்புசாமி பெற்றுக் கொண்டார்.
விழாவில் வசனகர்த்தா ஆரூர்தாஸ், ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், டைட்டன் ரகு, பத்திரிகையாளர் நடராஜன், டாக்டர் மயிலப்பன், ராஜா வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் ஏவி.எம். சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர், ஏவி.எம். நிறுவனங்களின் ஊழியர்களும் இந்த விழாவில் பங்கு பெற்றார்கள். விழாவிற்கு வந்திருந்தவர்களை எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன், ஆகியோர் வரவேற்றார்கள்.