பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த மதுரவீரன் படம் பற்றி இருவேறு கருத்துக்கள் இருந்தாலும் அதில் நடித்த மீனாட்சியின் எளிய அழகை எல்லோரும் பாராட்டவே செய்தார்கள். தமிழ் கதை களத்துக்கு ஏற்ற ஒரு நடிகை கிடைத்து விட்டதாக எல்லோரும் கருதினார்கள். சமுத்திரகனி, சசிகுமார், சீனு ராமசாமி படங்களில் ஒரு ரவுண்டு வருவார் என்று நினைத்தார்கள்.
ஆனால் படம் முடிந்த பிறகு அவரை ஆளைக் காணவில்லை. இப்போதுதான் மீடியாக முன் வந்திருக்கிறார். இத்தனை நாளா எங்க போயிருந்தீங்க என்று கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம்.
மதுரவீரன் நடிக்கிறப்போ நான் 10வது வகுப்பு படிச்சிட்டிருந்தேன். இப்போது பிளஸ் 1 படிக்கிறேன். பிளஸ் 1, பிளஸ் 2தான் முக்கியமான படிப்பு. நம்ம கேரியரை தீர்மானிக்கிற படிப்பு. அதனால் பிளஸ் 1 எக்ஸாம் எழுதுறதுக்காக அதில் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன். அதான் ஒரு சின்ன பிரேக். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன்.
முதல் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்ததால் எல்லோருமே சேலை கட்டி நடிக்கிற கிராமத்து பெண் கேரக்டருடனேயே வருகிறார்கள். அதுதான் வருத்தமாக இருக்கிறது. பேசிக்கா நான் மார்டன் பொண்ணு. அதனால் மார்டன் கேரக்டராக எதிர்பார்க்கிறேன். அதற்காக கிராமத்து பெண்ணாக நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. எல்லா கேரக்டர்லேயும் நடிப்பேன். என்கிறார் மீனாட்சி.