மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழகத்திற்கு சூனியம் பிடித்தது போல் உள்ளது, என, நடிகர் சிம்பு கூறியுள்ளார்.
சென்னையில் நடிகர் சிம்பு கூறியதாவது:
இன்று, காலையில் நடிகர் சங்கம் சார்பில் நடந்த மவுன போராட்டத்தில், நான் கலந்து கொள்ளவில்லை. நிறைய பிரச்னை சென்று கொண்டுள்ளது. தமிழ் சினிமா ஸ்டிரைக்கில் உள்ளது. யாருக்கும் வேலையில்லை. ஒரு காரணத்திற்காக நடக்கிறது. இதற்கு குறை சொல்லவில்லை. நடிகனாக இதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறேன். ஜி.எஸ்.டி.,யிலிருந்து ஸ்டிரைக் வரை பல பிரச்னைகள் உள்ளன. இதற்கு அரசிடமிருந்து தீர்வு காண முடியாமல் திண்டாடி கொண்டுள்ளோம். இதில் ஸ்டெர்லைட் , காவிரி போராட்டம் நடத்தவதில் உடன்பாடில்லை. பேசாததால் தான் இவ்வளவு பிரச்னை. பேசினால் தான் பிரச்னை தீரும். பேசாமல் நடத்தும் போராட்டத்தால் என்ன பயன். இந்தபோராட்டத்தில் உடன்பாடில்லை. இதுதவறு என்றால், மன்னித்துவிடுங்கள். அரசியல் ரீதியாகவும், மக்கள் ரீதியாகவும் பிரச்னை மேல் பிரச்னை வருகிறது. இது குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும். முன்னாள் முதல்வர் இறந்ததிலிருந்து தமிழகத்திற்கு சூனியம் வைத்தது போல் பிரச்னைகள் வருகின்றன. முன்னாள் முதல்வர் மரணத்தில் என்று உண்மை வெளியே வருகிறதோ அன்றுதான் தமிழகத்திற்கு விடிவு வரும். பிரிமியர் லீக் கிரிக்கெட்டிற்கு யார் சொன்னாலும் சரி, கறுப்புச ட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவியுங்கள். கிரிக்கெட்டை பார்க்க கறுப்பு சட்டை அணிந்து வருபவர்களை அனுமதியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.