சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் | சீதா ராமன் தொடரில் என்ட்ரி கொடுத்த தீபா : இனி கதையே மாறப்போகுதாம் | சினிமாவில் ஹீரோவாகும் சீரியல் நடிகர் : ஜோடி நடிகை யார் தெரியுமா? | 'எல்360' படப்பிடிப்பு ஆரம்பம் |
காவிரி பிரச்சனை தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில், தனுஷ் இயக்கி நடித்த 'பவர் பாண்டி' படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தனுஷ் முதன்முறையாக இயக்குநர் நாற்காலியில் அமர்ந்த படம் 'பவர் பாண்டி'. இந்தப் படம் வரிவிலக்குக்காக கடைசி நேரத்தில் 'ப. பாண்டி' எனப் பெயர் மாற்றப்பட்டது. ராஜ்கிரண், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டியன், பிரசன்னா, சாயாசிங் ஆகியோர் நடித்த இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்தது.
சின்ன வயது ராஜ்கிரணாக தனுஷும், சின்ன வயது ரேவதியாக மடோனா செபாஸ்டியனும் நடித்த இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.
தமிழில் ஓரளவு வெற்றியடைந்த இந்தப் படம், தற்போது கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. இதற்கான வியாபார ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தாகியுள்ளது. ராஜ்கிரண் வேடத்தில் அம்பரீஷ் நடிக்கிறார். தனுஷ் வேடத்தில் சுதீப் நடிக்கிறார்.
ரேவதி வேடத்தில் நடிக்க சுஹாசினி மணிரத்னம், குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.