தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், பிரபுதேவா நடித்துள்ள படம் மெர்க்குரி. சைலண்ட் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படத்தை ஏப்., 13-ம் தேதி ரிலீஸ் செய்ய போவதாக கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடந்து வருவதால் கார்த்திக் சுப்பராஜின் முடிவுக்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படத்தை வெளியிட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் எதிர்ப்புக்கு பணிந்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வரும் போராட்டத்திற்கு நான் உட்பட எனது மெர்க்குரி படக்குழு ஆதரவு தெரிவிக்கிறோம். பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை மெர்க்குரி படம் தமிழகத்தில் வெளியாகாது என நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். விரைவில் ஒரு நல்ல முடிவு ஏற்படும் என நம்புகிறோம் என தெரிவித்திருக்கிறார்.