ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
பிரபல சினிமா தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம் வீட்டுக்கு அதிகாலையில் வந்த மணலி போலீசார், திடுமென அவரை குண்டு கட்டாக மணலி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பிரபல பைனான்சியர் குந்தஷா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஜெயிக்கிற குதிரை என்ற படம் எடுப்பதற்காக கொடுக்கப்பட்ட 35 லட்ச ரூபாய் பணத்தை, சக்தி சிதம்பரம் திருப்பிக் கொடுக்கவில்லை என்ற காரணத்துக்காக, அவரை போலீசார் அழைத்துச் சென்றனர்.
இந்த பிரச்னையை, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷாலிடம் கொண்டு சென்றனர். ஏற்கனவே இந்த பிரச்னை தொடர்பாக தயாரிப்பாளர் கவுன்சில் விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில், போலீஸ் இதில் எப்படி தலையிடலாம் என்று மட்டும் கேட்டவர், மேற்கொண்டு, சக்தி சிதம்பரத்துக்காக எதையுமே செய்யவில்லை. இதனால், விஷால் மீது கோபம் கொண்ட சக்தி சிதம்பரம் ஆதரவாளர்கள், பிரச்னையை, விஷாலுக்கு எதிர்ப்பாக இருக்கும் நடிகர் ரித்திஷுக்கு பிரச்னையை கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து, அவர், இந்த பிரச்னையை கையில் எடுத்து, விஷாலுக்கு குடைச்சல் கொடுக்க துவங்கி உள்ளார்.