சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது |
மக்கள் நீதி மையத்தின் மாநாடு திருச்சியில் நடக்கிறது. இதற்காக அங்கு சென்றுள்ள கமல், செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது....
மக்கள் நீதி மையம் பிப்.22 அன்றே திருச்சி பொதுக்கூட்டம் பற்றி அறிவித்திருந்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என நம்பிக்கையுடன் இருந்தோம் நாங்கள். ஆனால் ஏற்கனவே 2016-ல் நிகழ்ந்த நிகழ்வுகள் நியாபகம் வருகின்றன. அப்போது 4 வாரத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. அப்போதும் நுணுக்கங்களை தயாரித்து சாக்குபோக்கு சொல்லி தாமதிக்கப்பட்டது. இப்போதும் அதே நாடகம் அரங்கேறுகிறது.
காவிரி வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. ஆனால், தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோ, போலியான ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தோ தனது இயாலாமையை மறைக்க முடியாது. மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசின் எடுபிடி போல் நடக்கிறது தமிழக அரசு. இந்த நிகழ்வுகளினால் எங்கள் பொதுக்கூட்டம் இன்று காவிரி பிரச்னை குறித்து முக்கியமாக விவாதிக்கும். பிரச்னைகள் மட்டும் பேசாமல் தீர்வுகளுக்கான வழிகளையும் முன்னிறுத்தும்.
இதுவரை நடந்த எங்களின் ஆய்வுபடி முக்கிய துறைகளில் மையத்தின் கொள்கைகளுக்கான கோட்பாடு அறிவிக்கப்படும். இதனை மையமாக வைத்து அடுத்த 5 மாதங்களில் எங்களின் முழு கொள்கைகளும் தயாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.