மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியல் விவகாரங்களுக்கும், மத்தியில் நடைபெறும் விவகாரங்களுக்கும் மட்டுமே தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள் புதிய அரசியல்வாதிகளான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். அவர்களது படங்களை கர்நாடகாவில் திரையிட மாட்டோம் என்று அறிவித்த கன்னட சலவாளி தலைவர் வாட்டாள் நாகராஜ் கருத்துக்கு இருவரும் பதில் கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார்கள்.
ஒரு ஜனநாயக நாட்டில் அவர்களது படங்களை வெளியிட மாட்டோம் என ஒரு கன்னட அமைப்பின் தலைவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரையும் நேரடியாகவே மிரட்டுகிறார். ஆனால், அது பற்றி எதுவும் சொல்லாமல் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அமைதியாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
வெளிப்படையாக பதில் கொடுத்தால் எங்கே பழையபடி மன்னிப்பு கேட்டுவிட வேண்டிய சூழ்நிலை உருவாகுமோ என ரஜினிகாந்த் தரப்பு யோசித்திருக்கலாம். அவருக்கு அடுத்தடுத்து 'காலா, 2.0' ஆகிய படங்கள் வெளியீட்டிற்குக் காத்திருக்கின்றன. கமல்ஹாசனும் அடுத்து 'விஸ்வரூபம் 2' படத்தை வெளியிட உள்ளார்.
கமல்ஹாசன், ரஜினிகாந்திற்கு ஆதரவாக திரையுலகத்தைச் சேர்ந்த எந்த சங்கங்களும் இதுவரை எதுவும் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக, கர்நாடகாவைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ் இருக்கிறார். மத்திய அரசைப் பார்த்து அடிக்கடி கேள்வி கேட்பவர், அவர் மாநிலத்துக்காரர் பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காமல் இருக்கிறார்.