மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ்த் திரையலகத்தில் ஒரு மாத காலமாக புதிய படங்கள் வெளியீடு இல்லாமல் தியேட்டர்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. திரைப்படம் பார்க்கும் ஒரு பொழுதுபோக்கையே தமிழ் ரசிகர்கள் ஏறக்குறைய மறந்துவிட்டார்கள். இதிலிருந்தே தமிழ் ரசிகர்கள் தமிழ்ப் படங்களைத்தான் அதிகம் விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். மற்ற மொழிப் படங்களுக்கு மிஞ்சிப் போனால் இரண்டு நாட்கள் மட்டுமே இங்கு வசூலை ஈட்ட முடியும்.
கடந்த வாரம் தயாரிப்பாளர் சங்கம் மற்ற சங்க நிர்வாகிகளுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது திரையுலகத்திற்கென்று தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். தேவைப்பட்டால் அப்படி ஒரு வாரியம் அமைக்கப்பட்டு திரையுலகப் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு, தூத்துக்குடியில் தெரிவித்துள்ளார்.
அதற்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். அப்படி ஒரு வாரியம் அமைக்கப்படும் பட்சத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஸ்டிரைக் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. அரசு உடனடியாக அமைக்கவில்லை என்றாலும், விரைவில் அமைப்போம் என்று சொன்னாலே திரையுலகினர் ஸ்டிரைக்கை வாபஸ் பெறவும் முடியும். அதற்கான தீர்வை விரைவில் எட்டினால் இந்தத் தொழிலில் உள்ள தொழிலாளிகளுக்கும், பணம் முதலீடு செய்யும் முதலாளிகளுக்கும் விடிவுகாலம் பிறக்கும்.
காவிரி மண்சார்ந்த மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் தேவை காவிரி மேலாண்மை வாரியம். தமிழ்க் கலைஞர்களுக்குத் தேவை திரையுலக வாரியம். இரண்டு வாரியமும் இனிதே அமைந்தால் சிறப்பு.