ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு, மற்ற பணிகள் எதையும் கடந்த மாதம் மார்ச் 16ம் தேதியிலிருந்து நடத்த வேண்டாம் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து பலரும் அவர்களது வேலைகளைத் தள்ளி வைத்தார்கள்.
விஜய் படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது என்று தெரிந்ததும் எதிர்ப்பு எழுந்தது. பின்னர், அந்த படப்பிடிப்பையும் நிறுத்திவிட்டார்கள். விஜய் சேதுபதி மட்டும் யார் பேச்சையும் கேட்காமல் வெளிநாட்டிற்குச் சென்று 'ஜுங்கா' படப்பிடிப்பை நடத்தினார்
இதனிடையே, நடிகை சமந்தா, தமிழ், தெலுங்கில் தயாரித்து வரும் 'யு டர்ன்' படத்தின் ரீமேக் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் ஆரம்பமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்ப் படங்களுக்கு படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று சொல்லி அனைவரும் நிறுத்திவிட்டார்கள். ஆனால், சமந்தாவின் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயார் ஆவதால் அதற்கு எந்த தடையும் இல்லை என்றும் சிலர் சொல்கிறார்கள்.
சமீப காலங்களில் தெலுங்கில் எடுக்கப்படும் பல படங்களை, தமிழ், தெலுங்கு என எடுப்பதாகச் சொல்லி ரசிகர்களை பலர் ஏமாற்றி வருகிறார்கள். சமந்தா உண்மையிலேயே அந்தப் படத்தை தமிழில்தான் எடுக்கிறாரா இல்லையா என்பது இனி நடக்கப் போகும் படப்பிடிப்பு வைத்து அறிந்து கொள்ளலாம். படப்பிடிப்பு நடந்தால் அது தெலுங்குப் படம் மட்டுமே, நடக்கவில்லை என்றால் அது தமிழ்ப் படமும் கூட....!