தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமா கடந்த ஒரு மாதமாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. புதிய படங்கள் வெளியாகவில்லை. லட்சக்கணக்கான பேர் வேலையிழந்தும், கோடிக்கணக்கில் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.
திரைத்துறை பிரச்னையை தீர்க்க அரசின் உதவியையும் நாடியிருக்கிறது தமிழ் திரையுலகம். இதனிடையே திரைதுறைக்கு என்று தனிவாரியம் அமைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி கோரிக்கை வைத்தது.
தனி வாரியம்
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, தேவைப்பட்டால் திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்றார். மேலும் தயாரிப்பாளர்கள் சங்க பிரச்னை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
விஷால் நன்றி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், திரைத்துறை சம்மந்தபட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகின்றோம் என்ற தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறியுள்ளார்.