'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த 48நாட்களாக போராடி வருகிறார்கள். ஆனால் அதுகுறித்து இதுவரை அரசு தரப்பில் பொதுமக்களுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது சில அரசியல் கட்சி தலைவர்களும் அந்த போராட்ட களத்திற்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியிருப்பதால் போராட்டம் தற்போது இன்னும் வலுவடைந்துள்ளது.
மேலும், அப்போராட்டத்திற்கு ஆதரவு ட் தெரிவித்த மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல், ஏப்ரல் 1-ந்தேதியான இன்று போராட்டக்களத்திற்கு சென்று மக்களை சந்திக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதையடுத்து நேற்று ரஜினி தனது டுவிட்டரில் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்த நிலையில், நடிகரும், சமத்துவக்கட்சி தலை வருமான சரத்குமார் 48வது நாளான நேற்று தூத் துக்குடி சென்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள சரத்குமார், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் மக்களை சந்தித்து எனது ஆதரவை தெரிவித்தேன். மேலும், போராட்டக் களத்தில் குமரெட்டியாபுரம் மக்கள் பயன்படுத்தும் மாசு கலந்த நீரை அருந்தி எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன் என குறிப்பிட்டுள்ளார்.