துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
தென்னிந்திய அளவில் ஆரம்பமான க்யூப் நிறுவனங்களுக்கு எதிரான ஸ்டிரைக், கேரளாவிலும், கர்நாடகாவிலும் உடனடியாக முடிவுக்கு வந்தது. தெலுங்குத் திரையுலகத்திலும் பிரச்சினை வருவதற்கு முன்பாகவே முடித்துக் கொண்டார்கள். ஆனால், தமிழ்த் திரையுலகத்தில்தான ஒரு மாத காலமாக ஸ்டிரைக் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்த் திரையுலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஸ்டிரைக்கினால் தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலப் படங்களுக்குதான் பலன் அதிகமாக உள்ளது.
சாதாரணமாக தெலுங்குப் படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும் போது ஒரு சில தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும். ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் சென்னையிலேயே கூட 40 தியேட்டர்களுக்கும் மேல் கடந்த சில வருடங்களாக வெளியாகி வருகிறது. இருந்தாலும் பெரிய அளவில் வசூலைப் பெறாது.
இப்போது ஸ்டிரைக் என்பதால் ராம்சரண், சமந்தா நடித்து நேற்று வெளியான 'ரங்கஸ்தலம்' படம் சென்னையில் மட்டுமே சுமார் 50 தியேட்டர்கள் வரை வெளியாகியுள்ளது. இதில் சத்யம் குரூப்பில் மட்டும் 13 தியேட்டர்களில் தினசரி 18 காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழ்த் திரையுலகத்திற்கு ஆதரவாக, தெலுங்குப் படங்களை தமிழ்நாட்டில் வெளியிட மாட்டோம் என்று சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அவர்களது வாக்குறுதியை மீறியுள்ளார்கள். அதற்கு சிரஞ்சீவி குடும்பத்தாரின் ஆதிக்கம்தான் காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தெலுங்குப் படங்களுக்குத் தற்போது கிடைத்திருக்கும் இடம், தமிழ்த் தயாரிப்பாளர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சில தியேட்டர்காரர்கள் வேண்டுமென்றே ஆதரவு தருகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.