பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ் சினிமா கடந்த 1ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. புதிய படங்கள் வெளியாகவில்லை, படப்பிடிப்பு நடக்கவில்லை. ஒட்டுமொத்த திரையுலகமும் ஸ்தம்பித்து உள்ளது. லட்சக்கணக்கான பேர் வேலையிழந்தும், கோடிக்கணக்கில் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் 50-க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளன. சென்சார் சான்றுக்காக 20 படங்கள் காத்திருக்கின்றன. ஆக ஒட்டுமொத்தமாக 70 படங்கள் வரை ரிலீஸ்க்கு தயாராகி உள்ளன.
வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் சங்கம், மற்ற சங்க நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. நேற்று தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். 5மணிநேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடந்தது.
கியூப், விபிஎப்., கட்டணத்தை இனி கட்ட முடியாது. கியூப் நிறுவனம் அதையும் மீறி திரையரங்க உரிமையாளர்களை மிரட்டினால் நீதிமன்றம் சென்று ஒட்டுமொத்தமாக போராடுவது என்றும், ஆன்லைன் டிக்கெட்க்கு அதிக கட்டணம் வசூலிக்க கூடாது, டிக்கெட் கட்டணங்கள் வரைமுறை, கணினிமையமாக்கல் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷால், பல விஷயங்களை விவாதித்தோம். தொடர்ந்து பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் ஒரு நல்ல முடிவு ஏற்படும் என தெரிவித்தார்.