இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த வாரமே அவர்களுடைய வேலை நிறுத்தப் பேராட்டத்தை விலக்கிக் கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தாலும் ஒரு தியேட்டரில் கூட 25 சதவீத அளவிற்குக் கூட மக்கள் வருவதில்லை என கவலையில் இருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
வாரத்திற்கு நான்கைந்து புதிய படங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் கடந்த நான்கு வாரத்திற்கும் மேலாக புதிய படங்கள் வராத காரணத்தால் தியேட்டர்களுக்கு மக்கள் வரவேயில்லை. 16ம் தேதி முதல் தியேட்டர்காரர்களே அரசை எதிர்த்து போராட்டம் என அறிவித்தார்கள். ஆனால், அரசு தரப்பில் கெடுபிடி எழுந்த்தாக சொல்லப்பட்ட நிலையில் அவர்களே திடீரென வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டார்கள்.
தியேட்டர்காரர்கள் பலரும் தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தம் சீக்கிரமே முடிவுக்கு வரவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் கட்டணத்தை எதிர்த்துதான் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தது. கடந்த வாரத்திலிருந்து அந்தக் கட்டணத்தை தியேட்டர்காரர்கள் அவர்களாகவேதான் செலுத்திக் கொண்டிருக்கிறார்களாம். அதையேதான் தயாரிப்பாளர் சங்கமும் அவர்களது முதல் கோரிக்கையாக வைத்துள்ளது.
வருங்காலங்களில் டிஜிட்டல் சேவைக்கான விபிஎப் கட்டணங்களை செலுத்த மாட்டோம் என்பதில் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள். கடந்த ஒரு வார காலமாக வேறு வழியில்லாமல் தியேட்டர்காரர்களே அதை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இனி, தியேட்டர்காரர்கள்தான், டிஜிட்டல் சேவை நிறுவனங்களுடன் பேசி அதை சரிப்படுத்த வேண்டும் என்ற நிலையை தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கியுள்ளது.
இன்று தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் மீண்டும் சந்தித்துப் பேச உள்ளார்கள். இன்று இறுதி முடிவு எட்டினால் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நடக்கும் வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்படும். இல்லையேல் வரும் ஏப்ரல் மாதத்திலும் அது தொடர வாய்ப்புள்ளது.